Wednesday, October 24, 2007
Wednesday, September 12, 2007
இன்னாங்கடா எருமை ஏரோப்ளேன் ஓட்டுது?
நாங்க பத்திரிகைக்காரங்க.ஈரேழு உலகத்திலேயும்காலப் பதித்தவங்க என்பாங்க
அந்தவிகடன் இந்த விகடன் தராசு கிராசு மட்டை மண்ணாங்கட்டி இன்வெஸ்டிகேசன் ஜர்ன்னலிசம்
என்பாங்க
என்ன இழவோ
செய்தி இன்னான்னா..
புலிகளின் பெரிசு ஒருத்தரை தூக்கிட்டாங்களாம் என்று சிங்களர் ஒரு வெடியை கொளுத்த அதை தினமலர் ஊதி வானவேடிக்கையாக்க வையகமெல்லாம் (மாத்துக்கட்சியினர்) திருநாள் கொண்டாடிட புதுசா தாய்லாந்து அரசே நேரடியாய் அறிக்கையில் நாங்க யாரையும் அப்படி தூக்கல என்று அறிக்கைவிட்டு நெஞ்சில் சிலருக்கு பாயாசத்தையும் சிலருக்கு வெந்நீரையும் வார்த்திருக்கு.
| புலிகளின் முக்கிய உறுப்பினர் பத்மநாதன் கைது செய்யப்படவில்லை: தாய்லாந்து அரசு அறிவிப்பு |
| [புதன்கிழமை, 12 செப்ரெம்பர் 2007, 04:08 ஈழம்] [அ.அருணாசலம்] |
| தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரும், அதன் வெளிநாட்டு ஆயுதக் கொள்வனவு முகவருமான குமரன் பத்மநாதனை கைது செய்யவில்லை என்று தாய்லாந்து அரசாங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தாய்லாந்தின் இன்ரபோல் தலைவர் கேணல் அபிசாட் சுரிபன்யா தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகரும், அதன் வெளிநாட்டு ஆயுத முகவராக 20 வருடங்களுக்கு மேலாக செயற்பட்டவருமான கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் பாங்கொக்கில் கைது செய்யப்படவில்லை. மேலும் பத்தமநாதனை சிறிலங்காவிற்கு நாடு கடத்துமாறு கோரி சிறிலங்கா அரசாங்கத் தரப்பு தாய்லாந்து காவல்துறையினரை நாடியுள்ளதாக வெளிவந்த தகவல்களையும் அவர் மறுத்துள்ளார். |
yahootamil thinamalar News
ராஜீவ் படுகொலையில் தொடர்புடைய விடுதலைப்புலி கைது
புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 11 செப்டம்பர் 2007 ( 22:19 IST )
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களுள் ஒருவருமான கேபி என்கிற குமரன் பத்மநாதன், பேங்காக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக் கொண்டுவர சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தாய்லாந்தில் நேற்று பத்மநாதன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசை சிபிஐ அணுகியதாகவும், அவர் மீது கிடப்பில் உள்ள வழக்கு தொடர்பான விவரங்களை சமர்பித்து, பத்மநாதனை இந்தியா கொண்டுவர சிபிஐ முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாகவும் ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டின் ரனோங் பகுதியில் கடந்த மாதம் விடுதலைப்புலிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பத்மநாதனும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்மூன்று விடுதலைப்புலிகள் மற்றும் பத்மநாதன் ஆகியோர் தாய்லாந்தில் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவர்களுள் பத்மநாதனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
சிபிஐ ராஜீவ் என்று உடனேயே ஆரம்பிச்சுடுவாங்களே..
Tuesday, August 7, 2007
வைகோ கின்னஸ் சாதனை
வைகோ எழுதும் கடிதங்களை பிரதமர் பார்வையிடுவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
இனி வைகோ கடிதம்
செஞ்சோலைப் படுகொலைக்கான இந்திய அரசின் வெகுமதிதான் ராடார்கள்?: இந்தியப் பிரதமருக்கு வைகோ கடிதம்
செஞ்சோலைப் படுகொலை நடத்திய சிங்கள அரசுக்கு வெகுமதி அளிக்கவா இந்திய அரசு ராடார்கள் வழங்கியுள்ளது? என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
மன்மோகன் சிங்குக்கு வைகோ எழுதியுள்ள கடித விபரம்: கடந்த 2007 ஜூலை 16 ஆம் நாள் நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். இலங்கைத் தீவில் தமிழ் இனத்தைப் பூண்டோடு அழிக்க தொடர்ந்து கொடூரமான இராணுவத் தாக்குதல்களை நடத்தி வரும் சிங்கள இனவெறி அரசுக்கு, இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ராணுவ ஆயுதங்களையும், உதவியையும் வழங்கி வருவது குறித்து, என்னுடைய வேதனையையும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறேன். தமிழ் இனத்தை இராணுவ ரீதியாக தாக்கி அழிக்கும் இனப்படுகொலையைச் செய்யும் குற்றவாளிதான் சிங்கள அரசு என்பது, மறுக்க முடியாத நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.
ஈழத்தமிழர்களின் நலனில் உண்மையான அக்கறை உள்ள அரசியல் கட்சிகளும், ம.தி.மு.க.வும் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக, இந்தியா-இலங்கை இராணுவக்கூட்டு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து இடவில்லை என்றாலும் திரைமறைவில் அத்தகைய இராணுவ ஒப்பந்தத்தின் கூட்டாளியாகவே இந்தியா செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டுகிறேன்.
என் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, இலங்கைக் கடலிலும், பன்னாட்டுக் கடல் பகுதியிலும், கடல் புலிகளுக்கும் இலங்கை கடற்படைக்கும் நடக்கும் சண்டையில், இந்தியக் கடற்படை சிங்கள கடற்படைக்கு தகவல் பரிமாற்றங்கள் முதல் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.
இலங்கைக்கு இந்தியா எந்தவிதமான ஆயுத உதவியோ, விற்பனையோ செய்வது இல்லை என்று 1998-ல் அனைத்துகட்சி கூட்டத்தில் இந்திய அரசு மேற்கொண்ட முடிவுக்கு முற்றிலும் எதிராக, உங்கள் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிங்கள அரசுக்கு ஆயுதங்களை அனுப்பி வருகிறது.
தமிழர்களின் பிரதிநிதிகளாகப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிங்கள இராணுவம் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது. மேலும், இலங்கை விமானப்படைக்கு உதவுவதற்காக இந்தியா தொடர்ந்து ராடார்களை வழங்கி வருகிறது என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
எந்த விமானப் படைக்கு இந்த உதவி? இத்தனை ஆண்டுகளாகப் பெண்களை, குழந்தைகளை அப்பாவித் தமிழர்களை ஆயிரக்கணக்கில் குண்டுவீசிப் படுகொலை செய்த இலங்கை விமானப் படைக்குத்தான் இந்த உதவி. பல தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களை கொன்ற இலங்கை விமானப்படைக்கு இந்த ஆண்டு ஜனவரியிலும், ஜூன் மாதத்திலும் இந்திய அரசு மீண்டும் ராடார்களை வழங்கி உள்ளது.
இலங்கை விமானப்படை செஞ்சோலைப் படுகொலை நடத்தியதற்காக இந்திய அரசு அளித்த வெகுமதிதான் இந்த ரேடார்களா? என்ற கேள்வி எழுகிறது. இத்தகைய அக்கிரமமான நடவடிக்கைகளால், செயல்பாட்டால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நேரு, இந்திராகாந்தி ஆகியோர் தொலைநோக்கோடு உருவாக்கிப் பின்பற்றிய அயல் உறவுக்கொள்கையை ஆயிரம் அடிக்கு கீழே குழிதோண்டி புதைத்துவிட்டது.
இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களுக்கு எதிராக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கொடிய துரோகம் இழைத்துவிட்டது. இலங்கைக்கு இனி எந்தவிதமான ஆயுதங்களும் விற்பதையோ, வாங்குவதையோ உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறும், ஏற்கனவே கொடுத்த ரேடார்களை திரும்பப் பெறுமாறும் தங்களை நான் வலியுறுத்திக் வேண்டுகிறேன் என்று அதில் வைகோ தெரிவித்துள்ளார்.
Sunday, August 5, 2007
பழகிபார்க்க ஒரு பட்டறை
Monday, July 23, 2007
ஈழத்து நாயிங்களா ஏண்டா சரவணா ஸ்டோர்ஸ் போறீங்க
This is happening for the n th time.Why should people go there?we should boycott the shop and only then they will realise.Our people are stupid and hooliganism has become part of life with all kazhagams in the forefront.
Comments L.sivalingam thatstamil.com
செய்தி இலண்டனிலிருந்து சென்று பந்து களவாடினார் ஈழத்தமிழர்
லண்டன் தமிழருக்கு அடி-சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் அடாவடி: 7 பேர் கைது
ஜூலை 23, 2007 தற்ஸ்தமிழ்கொம்
சென்னை: லண்டனைச் சேர்ந்த தமிழரின் கைக் குழந்தை பந்தைத் திருடி விட்டதாக கூறி, அவரது கையில் இருந்த பந்தைப் பறித்ததோடு நில்லாமல், அந்த தொழிலதிபரையும் சரமாரியாக அடித்து உதைத்த சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் 6 பேர் மற்றும் கண்காணிப்பாளரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை தி.நகரில் ரங்கநாதன் தெருவில் உள்ளது சரவணா ஸ்டோர்ஸ். இந்த நிறுவனத்தின் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் ஏராளமான புகார்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் அடாவடி, அராஜகங்கள் செய்தது தொடர்பாக பலமுறை புகார்கள் வந்துள்ளன.
ஒருமுறை பெரிய தொழிலதிபரின் மனைவியையே அடைத்து வைத்ததாகவும் புகார் எழுந்தது. அவர் மானபங்க முயற்சி நடந்ததாகக் கூட புகார் கூறினார். இந்த ஊழியர்களின் அராஜக செயல்கள் குறித்து பலமுறை போலீஸில் புகார்கள் கொடுக்கப்பட்டு, சிலமுறை நடவடிக்கைகள் எடுத்தும் கூட இன்னும் அவர்கள் திருந்தியபாடில்லை.
இந் நிலையில், லண்டனைச் சேர்ந்த தமிழரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள். லண்டனில் வசிக்கும் இளஞ்செழியன் தனது மனைவி குழந்தைகளுடன் சென்னைக்கு வந்தார்.
வழக்கமாக சென்னைக்கு வரும் வெளியூர்க்காரர்கள் சரவணா ஸ்டோர்ஸுக்குப் போவது போல இவரும் குடும்பத்துடன் போய் பொருட்களை வாங்கியுள்ளார்.
அப்போது அவரது கைக் குழந்தையிடம் பந்தைப் பார்த்த கடை ஊழியர்கள், அதை அவர் திருடி விட்டதாக கூறி பறித்துள்ளனர். ஆனால் அந்தப் பந்துக்குப் பணம் கொடுத்து விட்டதாக கூறிய இளஞ்செழியன், அதற்கான பில்லையும் காட்டியுள்ளார்.
ஆனால் அதைக் கண்டுகொள்ளாத கடை ஊழியர்கள் இளஞ்செழியனை சரமாரியாக அடித்துள்ளனர். காசு கொடுத்து பொருளை வாங்கி, தேவையில்லாமல் அடியையும், அவமரியாதையையும் வாங்கிய அதிர்ச்சியில் இளஞ்செழியன் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் 6 ஊழியர்களைக் கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆகி விட்டனர்.
இந்த நிலையில் நேற்று கடை கண்காணிப்பாளர் லிங்கராஜன் கைது செய்யப்பட்டார். அவரை இன்று நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர்.
Sunday, July 15, 2007
தொப்பிக்கல நடவடிக்கையும் தொடரப்போகும் தாக்குதல்களும்
*குடும்பிமலை (தொப்பிகல) அரச படைகளால் கைப்பற்றப்பட்டமை குறித்தும் அதன் பின்னர் தொடரக்கூடிய இராணுவ முன்னெடுப்புகள் குறித்தும் முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி கேணல் ஆர்.ஹரிகரன் எழுதியுள்ள கட்டுரையின் சாராம்சத்தை இங்கே தருகின்றோம். இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலை கொண்டிருந்த பொழுது, ஹரிகரன் அதன் புலனாய்வுத்துறைத் தலைவராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில்: சோ.ஜெயமுரளி
http://www.thinakkural.com/news/2007/7/15/articles_page31310.htm
கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வசமிருந்த தொப்பிகல (Baron's Cap) எனும் கடைசி பலம்மிக்க தளத்தையும் தமது பாதுகாப்புப் படைகள் கைப்பற்றிவிட்டதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அலட்டிக்கொள்ளாத அறிவிப்பொன்றின் (Terse announcement) மூலம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக இந்த வெற்றிக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.
கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி மட்டக்களப்புக்கு தெற்கே சுமார் 14 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கொக்கட்டிச்சோலை வீழ்ச்சியடைந்ததையடுத்து தொப்பிகல எந்த நேரத்திலும் கைப்பற்றப்படலாமென்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் தூண்டப்பட்டுவிட்டது. தொப்பிகலவுக்கான வழங்கற் பாதைகளான மேற்கேயுள்ள `ஏ5' நெடுஞ்சாலையிலிருந்தும் தென்மேற்கிலுள்ள நெடுஞ்சாலையான `ஏ-27'இலிருந்தும் விடுதலைப்புலிகளை அகற்றும் நடவடிக்கைகளை படையினர் ஏறத்தாழ முடித்துவிடும் தருணத்திலேயே இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
ஆனால், இந்த நடவடிக்கைக்கு 3 மாதங்கள் தேவைப்பட்டுள்ளன. 300 முதல் 400 வரையிலான போராளிகளால் கட்டுப்படுத்தப்பட்டிருந்த இப்பகுதியை கைப்பற்றுவதற்கு வலுவான போரிடும் திறன் படைத்த 2 படைப்பிரிவுகளைச் சேர்ந்த (2 பிரிகேட்) படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். `கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகளை அகற்றுதல்' எனும் திட்டத்தில் இது நான்கிலொரு பங்கு காலத்தை எடுத்துள்ளது. இயல்பான புவியியல் அமைப்பு, மிதிவெடிகள் மற்றும் வெடிபொருட்களின் நீண்ட பரம்பல் என்பன பாதுகாப்பு படைகளின் முன்னேற்ற வேகத்தை குறைத்திருந்தமையில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எப்படியிருந்தபொழுதும், விடுதலைப்புலிகளின் மீள் அமைதி, போராட்டக் களத்தில் அவர்கள் புகுத்தும் புதுமைகளை குறைத்து மதிப்பிட முடியாது. கனிந்த நிலையில் பறிப்பதற்கு தயாராகவுள்ள பழமொன்றைப்போல் தொப்பிகலவை வீழ்த்துவது சாத்தியமற்றது. வளங்கள் மற்றும் வெளியிலிருந்தான உதவிகள் தடுக்கப்பட்டிருந்த நிலையில் தொப்பிகலவிலிருந்த 300 திறமையான போராளிகளும் போராடுவதற்கு இயலாத நிலையை அடைந்திருக்கலாம். அத்துடன், அங்கிருந்தான அவர்களின் வெளியேறும் வழிகள் தடைப்பட்டமையாலும் அவர்கள் பின்வாங்கியிருக்கலாம்.
எனவே, தொப்பிகலவில் நட வடிக்கையில் ஈடுபட்டுள்ள படைகள் எதிர்பார்த்ததைவிட நீண்ட காலத்துக்கு அவர்கள் (படையினர்) அங்கு முடக்கப்படலாம். தொப்பிகல கைப்பற்றப்பட்டுவிட்ட பின்னரும் கூட விடுதலைப்புலிகளின் நடமாடும் போராளிப் பிரிவின் தாக்குதல்கள் அந்தப் பகுதியில் தொடரலாமென்பதை நாம் எதிர்பார்க்கலாம்.
படையினர் பொது மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இசைந்து கொடுக்காமலேயே தமது நடவடிக்கைகளின் திட்டங்களை வகுத்திருந்தனர். உண்மையில், மூன்று பரிமாணங்களில் அவர்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். தமக்கு ஏற்படக்கூடிய இழப்புகளை குறைத்தல், தற்பாதுகாப்புத் தாக்குதலில் ஈடுபடும் விடுதலைப்புலிகளை அகற்றுதல், தமது உயர் சூட்டுவலுவிலும் படை வலுவிலும் கவனத்தை செலுத்தல் என்பவையே அந்த மூன்று பரிமாணங்களுமாகும்.
இவ் இராணுவ நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கான அரசியல் அழுத்தங்கள் நிச்சயமாக இருந்த பொழுதும், இராணுவ தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தனது பாணியை மாற்றியிருக்கவில்லை. இதனால், படைகளின் இழப்பை அவரால் குறைத்துக்கொள்ளவும் முடிந்திருந்தது. இது எதிர்காலத்தில் நடைபெறப்போகும் நடவடிக்கைகளுக்கு பாரிய உந்துதலாகவும் அமையும். அத்துடன், வான் தாக்குதல்கள் மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களின் ஒன்றிணைந்த ரீதியிலான பயன்பாடானது விடுதலைப்புலிகளுக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்தாது போயிருந்தாலும் அவர்களின் போராடும் மனநிலையினை பாதித்திருக்கும். இவ்வாறான தாக்குதல் முறைமையினை எதிர்கால நடவடிக்கைகளிலும் நாம் காணலாம்.
கடந்த ஒரு வருடமாக கிழக்கில் இராணுவ ரீதியிலான பின்னடைவுகளை சந்தித்தமை மற்றும் அதிகார ஆளுகையில் கருணாவுடன் நீண்ட காலமாகத் தொடரும் இடர்பாடுகள் போன்றவற்றால் விடுதலைப்புலிகள் தமது பகுதிகளிலில் தயார்படுத்தல்களில் ஈடுபடுவது தவிர்க்கமுடியாததாகும்.
ரமேஸின் வெளியேற்றம்
விடுதலைப்புலிகள் தமது முக்கிய போராளிகளை பாதுகாப்பு முன்னரங்குகளிலிருந்து அழைத்திருந்தனர். புலனாய்வுத் துறையினரை மேற்ேகாள் காட்டி ஊடகங்கள் வெளியிட்ட கருத்துகள் உண்மையாயின் மட்டக்களப்பிலிருந்து ரமேஸ் தலைமையிலான 200 போராளிகள் கடந்த ஜூன் மாதத்தின் 2 ஆவது வாரத்தில் வெலிக்கந்தை, சேருநுவர, மூதூர் மற்றும் கிண்ணியாவிலுள்ள மணிராசகுளம் ஆகியவற்றின் காட்டுப் பகுதிகளூடாக வடக்கிற்கு சென்றுள்ளனர். எப்படியாயினும், கிழக்கில் மென் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொளள வேண்டும் என்பதற்காக சிறிய குழுக்களே சென்றிருக்க வாய்ப்புகளுள்ளன.
துரதிர்ஷ்டவசமான விடயமென்னவென்றால், இராணுவத்தின் தொப்பிகல கைப்பற்றலுடன் கிழக்கில் புலிகளின் நடவடிக்கைகள் முடிந்துவிடாது என்பதேயாகும். அங்கு கெரில்லா முறையிலான தாக்குதல்கள் முனைப்புப்பெறுவதற்கான வாய்ப்புகளுள்ளன. அரச சொத்துகளை தாக்கிவிட்டு தப்பியோடுதல், துருப்புகளின் நகர்வுகளை குழப்புவதற்கு கிளேமோர் தாக்குதல்கள், கருணா குழுவுடனான மோதல்களென்பன வரும் மாதங்களில் தமிழ்ப் பகுதிகளில் இடம்பெறலாம். அத்துடன், தப்பிச் செல்லும் புலிகளுடன் கடலில் மோதல்கள் இடம்பெறவும் சாத்தியங்களுண்டு.
கிழக்கில் இவ்வாறான நிலைமைகளுடன் கொழும்பிலுளள வெளிப்படையான இலக்குகள் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தலாம். இதேவேளை, கிழக்கில் படையினரின் நடவடிக்கை பூர்த்தியடைந்து அல்லது புலிகளின் தாக்குதல்கள்
தாழ் மட்டத்துக்கு கட்டுப்படுத்தப்பட்டால் கிழக்கிலுள்ள இரு படைப்பிரிவுகளை (பிரிகேட்) வடக்குத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தக் கூடியதாயிருக்கும். இது வடக்குத் தாக்குதல்களுக்கு படையினருக்கு கைகொடுக்கும்.
வடக்கில் நடவடிக்கைகள்
வடக்கை பொறுத்தவரையில், விடுதலைப்புலிகள் தமது இதயபூமியை பாதுகாப்பதற்காக போராட வேண்டியுள்ளது. தொப்பிகலவை பாதுகாத்தல் என்கின்ற விடயம் விடுதலைப்புலிகளது தாக்கு திறனின் குறிகாட்டியாக அமையுமானால், இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ போன்றோர் மதிப்பிட்டதைப் போல, வடக்கில் தாக்குதல் நடவடிக்கைகள் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு நீடிக்கலாம்.
நடைபெறப்போகும் அனைத்து "தாய்ச் சண்டை"களுக்குமென விடுதலைப்புலிகள் தமக்கு வேண்டிய இராணுவ தளபாடங்களை சேர்த்து வைத்துள்ளனர். ஆனால், தாக்குதல்கள் நீடித்துச் சென்றாலேயே ஆயுதங்களுக்கான தட்டுப்பாடுகள் வெளியே தெரியவரும்.
இவற்றைப் பார்க்கின்ற பொழுது வடக்கில் தமது நடவடிக்கைகளுக்காக திட்டமிடும் படையினர் தமது உத்திகளை மீட்டுப்பார்க்க வேண்டும் (Rework) அதை அவர்கள் செய்வார்களென்றே தெரிகின்றது. அதாவது, சூட்டு வலுவை அதிகரித்தல் (Preponderance of Fire Power) புலிகளின் களஞ்சியப்படுத்தல்களையும் ஒதுக்கங்களையும் அழித்தல், அவர்களின் கடல்வழி விநியோகத்தை தடுக்க கடற்பரப்பில் தடைகளை ஏற்படுத்தல் மற்றும் இவற்றுக்கு பின்புலத்தில் விசேட படையினரை புலனாய்வுச் செயற்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதேவேளை, முகமாலை, வவுனியாவின் மேற்கு மற்றும் கிழக்கு ஓமந்தை மற்றும் மன்னார் எல்லைகள் ஆகிய பாதுகாப்பு முன்னரங்குகளில் நடைபெறும் சிறிய தாக்குதல்கள் இரு தரப்பினதும் வலுவை காட்டுகின்றன.
இது இவ்வாறிருக்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முழு அளவிலான யுத்தத்துக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார். கிழக்கில் எவ்வாறு பயங்கரவாதிகளை எவ்வாறு அகற்றினோமோ அதேபோல் வடக்கிலிருந்தும் அவர்களை அகற்றினாலேயே நிரந்தர சமாதானத்தை இந்த நாட்டில் கொண்டுவரலாமென அவர் அண்மையில் கூறியிருப்பதானது போருக்கான சம்மதத்தையே காட்டுகின்றது.
இங்கு துன்பியலான யதார்த்தம் என்னவென்றால் துப்பாக்கிகள் தயாராகிவிட்டமையாலும் குண்டுகள் முக்கியமாகிவிட்டதாலும் சமாதானத்துக்கான சந்தர்ப்பங்கள் மூழ்கடிக்கப்படுவதேயாகும்.
வாரம் 3 முட்டை !!
71 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவில் வாரம் 3 முட்டை கருணாநிதி தொடங்கி வைத்தார் .
சென்னை, ஜூலை 16: பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவில் வாரந்தோறும் மூன்று முட்டைகள் வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் கருணாநிதி நேற்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி, 71 லட்சம் குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டைகள் வழங்கப்படுகிறது.
சத்துணவில் வாரம் மூன்று முட்டை வழங்கும் திட்டம், காமராஜர் பிறந்தநாளான நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தொடக்க விழா நடந்தது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு, திட்டத்தை தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு உணவு, முட்டை, சர்க்கரைப் பொங்கல் வழங்கி, அவர் பேசியதாவது:
காமராசரின் நினைவாக அரசு என்ன செய்கிறது என்ற கேள்விக்கு அளிக்கப்படும் பதிலாக சத்துணவுத் திட்டத்தை மேலும் வலுவுள்ளதாக, ஊட்டச்சத்து மிகுந்ததாக ஆக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இனி வாரம் மூன்று முறை சிறார்க்கு சத்துணவோடு முட்டைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
முட்டை வழங்குவதற்காக சொல்லி விட்டு, வழங்கப்பட்ட முட்டையை நிறுத்துகின்ற அரசாக இந்த அரசு இல்லாமல், ஒரு முட்டை, இரண்டு முட்டை, மூன்று முட்டை வழங்குகிறோம் என்று வழங்கிக் காட்டுகின்ற அரசுதான் உங்களால் உருவாக்கப்பட்ட இந்த தி.மு.க. அரசு.
வாக்குறுதிகளை வழங்கிவிடலாம். ஆனால், அதை நிறைவேற்றுவது மிக, மிக சிரமம். சில பேர் வாக்குறுதிகளை சுலபமாக வழங்குவார்கள். எப்படி சுலபம் என்றால், நிறைவேற்றவா போகிறோம் என்ற நம்பிக்கையோடு வாக்குறுதிகளை வழங்குவார்கள்.
இன்னும் சிலர், வெற்றி பெறவா போகிறோம், நாம் வாக்குறுதி வழங்கினால் நிறைவேற்றுவதற்கு என்று அந்த எண்ணத்தோடு வழங்குவார்கள். ஆனால், தி.மு.க.வைப் பொறுத்தவரை நாங்கள் உருவாக்கிய கூட்டணி மீது எங்களுக்கு நம்பிக்கை நிறைய உண்டு. இந்தக் கூட்டணி வெற்றிபெறாவிட்டால், வேறு எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்ற அந்த மனத் தெம்போடுதான் நான் வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கை மூலமாக வழங்கினேன்.
காமராஜர் கட்சிச் சார்பற்ற முறையில் ஒரு பெருந்தலைவர். அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாள் என்று சட்டமாக ஆக்கப்பட்டுள்ளது. ஏனெனில், முன்பு இதை கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்பட்டு, தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்து வேறொரு ஆட்சி வந்த போது, தி.மு.க. அரசின் அறிவிப்பை செயல்படுத்தவில்லை.
மேலும், சத்துணவுத் திட்டத்தில் முட்டை வழங்குவதையும் அந்த ஆட்சி நிறுத்தி விட்டது. அதற்குப் பிறகு, மீண்டும் தி.மு.க. ஆட்சி வந்த பிறகு, இன்றைக்கு நாங்கள் மூன்று முட்டைகள் வழங்குகின்ற விழாவினை நடத்துகிறோம். சிறார், சிறுமிகளுக்கு பள்ளிகளுக்கு சென்றால் சத்துணவு கிடைக்கும் என்ற ஆர்வத்தை தூண்டி, அதன் மூலம் அவர்களை கல்வியில் கருத்துள்ளவர்களாக ஆக்குவதே இதன் குறிக்கோள்.
கல்வி கற்றிட மூளை வளர்ச்சி மட்டும் போதாது. உடல் வளர்ச்சியும் தேவை. ஓடி விளையாடினால் தான் இளம் எலும்புகள் வளரும். தமிழகத்தில் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தாத நிலைமைதான் இருக்கிறது. அதனால்தான், சத்தான உணவாக முட்டை வழங்கி, ஒரு முட்டை இரண்டாகி, தற்போது மூன்று முட்டை என்று ஆக்கியிருக்கிறோம். அளவுக்கு மீறினால் அதுவும் உடம்புக்குக் கெடுதி என்பதால், இந்த 3 முட்டையோடு நிச்சயமாக நிறுத்தப்படும். அ, ஆ எழுத்துக்களில் கடைசியாகப் பார்த்தால், மூன்று முட்டைகள் போட்டு ஃ என்ற ஆயுத எழுத்து. இந்த ஆயுத எழுத்தோடு, இந்த முட்டை எழுத்துக்களை நாம் நிறுத்திக் கொள்கிறோம்.
ஓர் அரசு கல்விக்கு இத்தகைய ஊக்கங்களை அளிக்கும் போது, பெற்றோர், உற்றார் உறவினர், தங்களுடைய குழந்தைகளை கல்வி கற்க தவறாமல் அனுப்பி, நல்ல உத்வேகத்தை உருவாக்க வேண்டும். அப்போதுதான், காமராசர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் என்று நாம் கொண்டாடுவதற்கு அர்த்தம். நாடு வளர, சமுதாயம் வளர, இளந்தலைமுறை வளர இந்த நாள் பெரிதும் உதவும்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.
விழாவுக்கு சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, ÔÔஇந்த ஆண்டு 13,500 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். சென்னையில் ரூ.100 கோடியில் சர்வதேச தரத்துடன் மிகப் பெரிய நூலகம் அமைக்கப்படும்ÕÕ என்றார்.
முன்னதாக, தலைமை செயலாளர் திரிபாதி வரவேற்றார். அவர் பேசும்போது, Ôசத்துணவில் 3 முட்டைகள் வழங்கும் திட்டத்தில் 71 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள். ஒரு வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் வாரம் ஒரு முட்டை வழங்கப்படும். புதன்கிழமைதோறும் அங்கன்வாடி மையங்களில் இது வழங்கப்படும். இதில், 2 லட்சத்து 40 ஆயிரத்து 17 குழந்தைகள் பயனடைவார்கள். இந்த திட்டங்களுக்கு ரூ224 கோடி செலவாகும் என்றார். சமூக நலத்துறை செயலாளர் என்.எஸ்.பழனியப்பன் நன்றி கூறினார்.
Thursday, July 12, 2007
நான் சாம்பார்
இனி அடிக்கடி வருவேன்.சாம்பார் பிடிக்காதவர் விலகி நிற்க
ரசிகர் மன்ற முட்டாள்களே!
ஐயா சிவாஜியை சுவிங்கம் போடச் செய்த ராமதாஸ் ஐயா சொல்லியிருக்கிறார்.//
thatstamil.com
திருவண்ணாமலை: நடிகர், நடிகையர்களின் ரசிகர் மன்றங்களை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். திருவண்ணாமலையில் நடந்த விழாவில் ராமதாஸ் பேசுகையில், இளைஞர்களை கெடுப்பது சினிமாதான். இதன் மூலம் தான் சின்ன வயசிலேயே வன்முறை, செக்ஸ், பழிவாங்குதல் அனைத்தும் ஊசியில் மருந்தை செலுத்துவது போல் அவர்களின் மூளையில் திணிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட செயல்களுக்கு அறியாத கிராமத்து இளைஞர்கள் பலரும், படித்த இளைஞர்கள் கூட ரசிகர் மன்றம் என்ற பெயரில் தங்கள் வாழ்க்கையை கெடுத்து வருகின்றனர். இதன் மூலம் தான் சம்பாதிக்கும் பணத்தை இழந்து தெருவில் நிற்போர் இன்று பலர். எந்தவொரு நடிகர், நடிகையாவது அவர்கள் பெயரில் ஆரம்பிக்கும் ரசிகர் மன்றத்திற்கு பண உதவி செய்கிறார்களா? மசாலா படம்னு சொல்றாங்க. ஆனால் அதைப் போய் பார்த்தால் ஒருத்தன் 100 பேரையும் 1,000 பேரையும் அடிக்கிறான். அட எங்கேய்யா 100 பேரை ஒருத்தன் அடிக்கிறான். 100 பேர் சேர்ந்து தான் ஒருத்தனை அடிப்பாங்க. ஆனால் அப்படி காட்டினால் படத்தில நடிக்கிறவனோட பிழப்பு அதோகதி தான். கற்பழிப்பு சீன்களையும் விளக்கமாக காட்டுவதும் இந்த சினிமாவில்தான். இதெல்லாம் போதாதுன்னு இப்போ டி.வி. சீரியல்கள் எல்லாம் இரட்டை அர்த்தம் உள்ள கதையைத்தான் காட்டுகிறார்கள். அதைக் காட்டி குடும்பத்தில் இருக்கும் எல்லோரையும் கெடுக்கிறாங்க. சினிமாவில் ஹீரோவாக நடிப்பவன் தான் தான் ஒரு மிகப்பெரிய அறிவாளி என காட்டி கொள்கிறான். இந்த அறிவாளி ஏன் சமூகத்தில் வெளியே வந்து நல்ல செயல்களை செய்யக் கூடாது.? அப்படி செய்தால் தனக்கு ரசிகர் மன்றம் யார் வைப்பார்கள்? ஆகவே ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருப்பதற்கு பதில் நான் ஒரு முட்டாள் என நெற்றியில் எழுதி ஒட்டிக் கொள்ளலாம் என்றார். சில நாட்களுக்கு முன், குறும்படம் மற்றும் ஆவணப்படம் தயாரிப்போர் கூட்டத்திலும் சினிமாக்காரர்கள் ஒன்றும் அறிவு ஜீவிகள் கிடையாது என்று பேசினார் ராமதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
thatstamil